2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
'கே.ஜி.எப்' , ' சலார்' போன்ற பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற ரவி பஸ்ரூர், ஒரு இயக்குனரும் ஆவார். இதுவரை 5 படங்களை இயக்கி உள்ளார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது இயக்கும் கன்னட படம் 'வீர சந்திரஹாசா'.
கர்நாடக மாநிலத்தில் தெருக்கூத்தாக நடத்தப்பட்டு வரும் வீர சந்திரஹாசாவின் கதையை திரைப்படமாக்குகிறார். கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்று உழைத்து வருகிறார்.
இதுகுறித்து ரவி பஸ்ரூர் கூறும்போது “கர்நாடகாவின் பாரம்பரியமான யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி இது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல... கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழி பெயர்க்கும் திறனும் தேவையாக இருந்தது. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில் யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களின் பரந்துபட்ட பாராட்டிற்கு வழி வகுக்கிறது.
புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக 'வீர சந்திரஹாசா உருவாகி உள்ளது. என்றார்.