45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில், சிறுவர்கள் பொன்வேல், ராகுல், மற்றும் நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்த 'வாழை' படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குனர்கள், நடிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பலரும் நேரிலேயே கலந்து கொண்டனர். அதில் கலந்து கொள்ள முடியாத சிலர் சமூக வலைத்தளங்களிலும், வீடியோக்கள் மூலமும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த 'கொட்டுக்காளி' படம் நேற்று வெளியானது. அந்தப் படத்துடன் போட்டி போடும் விதத்தில்தான் 'வாழை' படமும் வெளியாகி உள்ளது. இருந்தாலும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த வாழ்த்து வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். ஆனால், அந்தப் பதிவிற்கான கமெண்ட் பகுதியில் 'வெரிபைடு அக்கவுண்ட்' மட்டுமே பதிலளிக்கும் விதத்தில் கட்டுப்பாடு செய்துள்ளார்.
ஏன் இப்படி செய்துள்ளீர்கள் என ரசிகர் ஒருவர் அதில் கமெண்ட் போட்டுள்ளார். மாரி செல்வராஜ் அவருடைய சில பதிவுகளுக்கு அனைவரும் கமெண்ட் போடும் விதத்திலும், சில பதிவுகளுக்கு 'வெரிபைடு அக்கவுண்ட்' பதிவிடும் விதத்திலும் மட்டுமே 'செட்டிங்'ஐ மாற்றி மாற்றி வைத்து வருகிறார்.