தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் இன்று(ஆக., 22) அக்கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்து வைத்து அவரது கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரன், அம்மா ஷோபா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. விஜய்யும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் என்று வெளிவரும் தகவல்களை அவை உறுதி செய்வதாகவே உள்ளன.
கட்சிக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு விஜய் அங்கிருந்து நகர்ந்து சென்ற போது அவருடைய அம்மா விஜய்யின் கையைப் பிடித்து ஏதோ சொல்ல முயற்சிக்கிறார். ஆனால், அதை கண்டு கொள்ளாமல், அம்மாவை திரும்பிக் கூடப் பார்க்காமல் அந்த இடத்தை விட்டு விஜய் நகரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் உடனடியாகப் பரவியது.
தன்னுடைய அம்மாவை விஜய் மதிக்காமல் செல்வது சரியா என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேடையில் பேசும் போது மட்டும் அப்பா, அம்மாவுக்கு நன்றி சொல்லியிருந்தார் விஜய்.
விஜய் தீவிர அரசியலில் இறங்கும் போது அவரது குடும்பத்தினரைப் பற்றியப் பேச்சுக்களும் அவருக்கு எதிராகத் திரும்பும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.