இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். இடையில் தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த பிரச்னைகளால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது மீண்டும் முழு மூச்சாக படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் பிரசாந்த் நடித்து வெளிவந்த 'அந்தகன்' திரைப்படம் பிரசாந்தை மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்பியது. இதனால் பிரசாந்த் மீண்டும் உற்சாகமாக உள்ளார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து ' தி கோட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் பேசியதாவது, " இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 படங்கள் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். குறிப்பிட்ட இயக்குனர்களுடன் மட்டும் நடிக்காமல் அனைத்து இயக்குனர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் "என பேசியுள்ளார்.