புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் |
சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. சரித்திரம் கலந்த பேன்டஸி படமான இப்படத்தின் வெளியீடு அக்டோபர் 10ம் தேதி என்று கடந்த ஜூன் மாதம் 27ம் தேதியே அறிவித்துவிட்டார்கள்.
இந்நிலையில் தசெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபட்டி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்துள்ள 'வேட்டையன்' படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுகிறோம் என இன்று அறிவித்துள்ளார்கள்.
ஒரேநாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாவது குறித்து சமூக வலைத்தளங்களில் பலவிதமான கருத்துக்கள் பதியப்பட்டு வருகிறது. ரஜினி ரசிகர்களும், சூர்யா ரசிகர்களும் அதற்குள் சண்டையை ஆரம்பித்து விட்டார்கள். 'வேட்டையன்' முன் யாரும் போட்டியிட முடியாது என ரஜினி ரசிகர்களும், 'கங்குவா' படம் இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படம் என சூர்யா ரசிகர்களும் ஏட்டிக்குப் போட்டியாக சண்டை போட்டு வருகிறார்கள்.