புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர். அதற்கு முன்பே அவர் 'வெப்பம்' படம் மூலம் அறிமுகமானவர். ஓடிடி வந்த பிறகு நானியின் பல தெலுங்குப் படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அவற்றிற்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. கடந்த சில வருடங்களில் நானி நடிக்கும் தெலுங்குப் படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியாகிறது.
அவர் தற்போது தெலுங்கில் நடித்துள்ள 'சரிபொத சனிவாரம்' படம் தமிழில் 'சூர்யாஸ் சாட்டர்டே' என்ற பெயரில் டப்பிங் ஆகி ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்துள்ள நானி, பிரியங்கா மோகன், அபிராமி, அதிதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய எஸ்ஜே சூர்யா, படத்தின் கதை என்ன என்பதை சுருக்கமாகச் சொன்னார். அவர் சொன்ன கதை, டிரைலர் ஆகியவற்றைப் பார்த்த பின்பு அப்படம் விக்ரம் நடித்து வெளிவந்த 'தில், கந்தசாமி' ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் எனத் தெரிகிறது. மக்களின் பிரச்சனைகளை அறிந்து 'சேவல்' முகமூடியுடன் போய் அவற்றை விக்ரம் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் ‛கந்தசாமி' படத்தின் கதை. 'தில்' படத்தில் இன்ஸ்பெக்டரான ஆசிஷ் வித்யார்த்தியை போலீஸ் வேலைக்குத் தேர்வான விக்ரம் எதிர்ப்பதுதான் கதை. இரண்டு கதைகளையும் கலந்து, கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார்களோ என எண்ண வைக்கிறது. படம் வெளிவந்த பின் எது உண்மை என்பது தெரிந்துவிடும்.