துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் தீவிர அரசியலில் நுழைய இருப்பதால் விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படத்திற்கு முந்தைய படம்மாக இது உருவாகியுள்ளது. அதனால் இதை பார்த்து பார்த்து கவனமாக உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.
13 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்தை வைத்து அவர் மங்காத்தா என்கிற வெற்றி படத்தை கொடுத்தார். அப்போது மங்காத்தா, வேலாயுதம் படப்பிடிப்புகளில் இருந்த விஜய் அஜித் இருவரையும் சந்திக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் வெங்கட்பிரபு.
அந்த சமயத்திலேயே வெங்கட் பிரபுவிடம் அஜித் நீங்கள் விரைவிலேயே விஜய் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று கூறினாராம். ஆனால் அந்த வாய்ப்பு கையில் வந்து சேர்வதற்கு 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறியுள்ள வெங்கட் பிரபு, கோட் படம் குறித்து அஜித் கூறிய விஷயம் ஒன்றையும் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இந்த கோட் திரைப்படம் மங்காத்தாவை விட 100 மடங்கு அதிகம் இருக்கும் விதமாக உருவாக்குங்கள் என்றும் விஜய் தீவிர அரசியலுக்குள் நுழைய இருப்பதால் அவரை திரையுலகில் இருந்து கம்பீர வெற்றியுடன் வழி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அஜித் தன்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.