‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா மற்றும் பலர் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தி கோட்' படம் செப்டம்பர் 5ம் தேதி பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தைப் பெரிய அளவில் வெளியிட படத்தை வாங்கியுள்ள அந்தந்த வினியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளார்களாம். தமிழக உரிமையை வாங்கியுள்ள ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பட வெளியீடு பற்றிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் உரிமையாளரான ராகுல், “அந்த ஏரியா, இந்த ஏரியா, ஆல் ஏரியாஸ் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக தமிழகத்தில் அனைத்துத் தியேட்டர்களிலும் செப்டம்பர் 5 முதல் 'தி கோட்' படம் திரையிடப்படுகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் படத்தின் ஆரம்ப நாட்களின் வசூல் புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் படத்திற்கான சிறப்புக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகளின் முன்பதிவும் ஆரம்பமாகியுள்ளது.