300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தையும் தாண்டி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக மாறி நடித்து வருகிறார். அதே சமயம் அவர் எப்போதுமே தனது நட்பு வட்டாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை செலவிடுவதிலும் தயங்காதவர். அவ்வப்போது இவர் தோழிகளின் வீட்டு விசேஷங்களிலும் அவர்களுடன் சுற்றுலாக்களிலும் கலந்து கொள்ளும் புகைப்படங்கள் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாவதை பார்க்க முடியும். இந்த நிலையில் அப்படிப்பட்ட நெருங்கிய தோழிகளில் ஒருவரான மனீஷா என்பவர் சமீபத்தில் பிரைன் டியூமர் நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவினார். இதுகுறித்து சமீபத்தில் அவரது பிறந்தநாள் அன்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் கீர்த்தி சுரேஷ்.
அதில் அவர் கூறும்போது, “21 வயதில் பிரைன் ட்யூமர் நோய்க்காக டயக்னைஸ் செய்ய ஆரம்பித்து கடந்த எட்டு வருடங்களாக நோய்க்கு எதிராக அவள் போராட்டம் நடத்தி வந்தாள். ஒரு நாள் அவளை மருத்துவமனையில் சந்தித்தபோது என்னால் தாங்க முடியவில்லை என்றாலும் அவள் முன்பாக எனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கிருந்து வெளியேறினேன், கடைசியாக அவளை நான் சந்தித்தபோது சுயநினைவின்றி இருந்தாள். அதன் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை. எனக்கு தோன்றும் ஒரு கேள்வி என்னவென்றால், இதுபோன்ற ஒரு இளம் பெண்ணிற்கு அவள் வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பே, அவர் இந்த உலகத்தை முழுதுமாக பார்ப்பதற்கு முன்பே, அவளுடைய விருப்பங்கள் கனவுகள் எதுவுமே நிறைவேறாததற்கு முன்பே எதற்காக இப்படி நடக்க வேண்டும் ? எனக்கு இப்போதும் விடை தெரியவில்லை. நீ இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டாலும் கூட தினசரி உன்னை பற்றி நினைவு வராத நாளே இல்லை” என்று உருக்கமாக கூறியுள்ளார்.