இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
விஜயகுமாரின் கலை குடும்பத்து வாரிசுகளில் ஒருவர்தான் சிந்து. அதாவது விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவின் சகோதரி மகள். 1990-ஆம் ஆண்டு வெளிவந்த 'இணைந்த கைகள்' என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பிறகு பட்டிக்காட்டுத் தம்பி என்ற படத்தில் ராம்கிக்கு ஜோடியாக நடித்திருந்தார். பரம்பரை, ஊர்க் குருவி, நம்ம வீட்டு கல்யாணம், அன்பே அன்பே உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் வாய்ப்புக் குறையத் தொடங்கியதும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். கோகுலம் வீடு, எங்கள் குடும்பம், தோழிகள், ஆனந்தம், மெட்டி ஒலி, ஆகிய தொடர்கள் அவர் நடித்ததில் முக்கியமானவை. 1995ம் ஆண்டு கன்னட நடிகர் ரகுவீர் என்பவரைத் திருமணம் செய்தார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஸ்ரேயா என்ற ஒரு மகள் உள்ளார்.
2005ம் ஆண்டு சுனாமி நிதி திரட்டும் ஊர்வலத்தில் சின்னத்திரை நடிகர், நடிகையர்களுடன் கலந்து கொண்டார். வெகு தூரம் ஊர்வலமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அப்போது அவருக்கு வயது 33.
மக்களுக்கான பணியின்போது உயிரை பறிகொடுத்த சிந்துவின் தியாகம் பற்றி யாருமே கண்டுகொள்ளாததுதான் மிகப்பெரிய சோகம்.