தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தனுஷ் இயக்கி, நடித்து திரைக்கு வந்திருக்கும் அவரது 50வது படம் ராயன். சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் ஆறே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, தமிழ் சினிமா வரலாற்றில் ஏ சான்றிதழ் பெற்று 100 கோடி வசூல் செய்த முதல் படம் இது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு இன்னொரு அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், இந்த படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமி நூலகத்தில் இடம் பெற தேர்வாகியுள்ளது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் தனுஷின் ராயன் படத்திற்கு சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.