இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் ப்ரொமான்ஸ் என்கிற படத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ், பிரேமலு படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்திருந்த சங்கீத் பிரதாப் மற்றும் ரோமாஞ்சம் என்கிற ஹாரர் காமெடி படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த அர்ஜூன் அசோகன் ஆகிய மூவரும் நடித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் கொச்சியில் உள்ள எம்ஜி ரோடு என்கிற இடத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் கார் சேசிங் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது..
இதில் எதிர்பாராத விதமாக இந்த நடிகர்கள் அனைவரும் அமர்ந்திருந்த கார் விபத்துக்குள்ளானது. இதை தொடர்ந்து மூவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த செய்தி நேற்று வெளியாகி மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விபத்தில் சிக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் சங்கீத் பிரதாப் தற்போது தான் நலமாக இருப்பதாக தனது சோசியல் மீடியா பதிவு மூலம் ரசிகர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் முந்தைய நாள் இரவு விபத்தை சந்தித்தாலும் நல்ல வேலையாக அனைவருமே தற்போது பாதுகாப்பாக இருக்கிறோம். நான் 24 மணி நேரம் தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்ததால் இது குறித்து தகவலை வெளியே யாருக்கும் தெரியப்படுத்த முடியாமல் போய்விட்டது. எனக்கு சிறிய காயம் தான்.. ஆனால் தற்போது நலமாக இருக்கிறேன். இன்று வீடு திரும்புகிறேன். சில நாட்கள் ஓய்வு எடுத்தபின் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி விடுவேன். மேலும் கார் ஓட்டுநர் மீது நான் புகார் அளித்துள்ளதாக கூறப்படும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என்பதையும் இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.