ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
மலையாள நடிகை பார்வதி தனக்கு ஏற்ற கதைகளையும் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனாலேயே மற்ற நடிகைகளில் இருந்து அவர் விரைவில் வித்தியாசப்பட்டும் தெரிகிறார். சமீபத்தில் மலையாளத்தில் அவரது நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் கூட அவரது வித்தியாசமான நடிப்பை பறைசாற்றும் விதமாகவே இருந்தது. இதை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்வதி.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் நீங்கள் நடிக்க வராவிட்டால் என்ன செய்திருப்பீர்கள் என்கிற வழக்கமான ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பலரும் நான் டாக்டராகி இருப்பேன், பிசினஸ் உமன் ஆகி இருப்பேன் என்பது போன்று தான் இதுவரை பதில் சொல்லி பார்த்திருக்கிறோம். ஆனால் இதிலும் வித்தியாசமாக நான் நடிக்க வராவிட்டால் நிச்சயமாக டீக்கடை ஆரம்பித்திருப்பேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பார்வதி. மேலும் இந்த உலகத்தில் ஒவ்வொரு வேலையும் தனக்கென ஒரு கவுரவத்தை வைத்திருக்கிறது. அதனால் டீக்கடை தொழிலிலும் நிச்சயமாக ஏதாவது சாதித்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.