பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ‛அந்தாதூன்' படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ரீ-மேக் ஆகி உள்ளது. இவரது தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்திலிருந்து அந்தகன் ஆன்தம் என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் விஜய் வெளியிட்டார். அனிருத், விஜய் சேதுபதி இணைந்து பாடி உள்ளனர்.
இந்த பாடலின் இசை என்னுடையது அல்ல என தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், “இது நான் வழங்கிய இசையோ, மிக்சிங்கோ அல்ல” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் வடிவேலு மீம்ஸை பகிர்ந்து, ‛‛வரலாற்றில் முதன்முறையாக ஆடியோ லேபிளும் பார்வையற்ற வேடத்தில் நடிக்கிறது. இது என் பாடலா என்பதை ஆய்வு செய்வதற்கு நான் பணம் வாங்குவதில்லை'' என பதிவிட்டுள்ளார்.
அந்தகன் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். ஆனால் அவரே இது நான் போட்ட இசை அல்ல என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது உள்ளது.