இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஹிந்தியில் வரவேற்பை பெற்ற ‛அந்தாதூன்' படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ரீ-மேக் ஆகி உள்ளது. இவரது தந்தை தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்திலிருந்து அந்தகன் ஆன்தம் என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் விஜய் வெளியிட்டார். அனிருத், விஜய் சேதுபதி இணைந்து பாடி உள்ளனர்.
இந்த பாடலின் இசை என்னுடையது அல்ல என தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன். இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், “இது நான் வழங்கிய இசையோ, மிக்சிங்கோ அல்ல” என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில் வடிவேலு மீம்ஸை பகிர்ந்து, ‛‛வரலாற்றில் முதன்முறையாக ஆடியோ லேபிளும் பார்வையற்ற வேடத்தில் நடிக்கிறது. இது என் பாடலா என்பதை ஆய்வு செய்வதற்கு நான் பணம் வாங்குவதில்லை'' என பதிவிட்டுள்ளார்.
அந்தகன் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். ஆனால் அவரே இது நான் போட்ட இசை அல்ல என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது உள்ளது.