'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி |
யுவன் சங்கர் ராஜா 'யு1 லாங் டிரைவ் லைவ் இன் கான்செர்ட்' எனும் பெயரில் நாளை மாலை (27ம் தேதி) சென்னையில் உள்ள நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் எனும் நிறுவனம் இதை நடத்துகிறது. பின்னணி பாடகர்கள் ஆண்ட்ரியா, ஹரி சரண், பிரேம் ஜி, ராகுல் நம்பியார், ஹரிப்பிரியா, திவாகர், ரிஷா, ஆதித்யா , ஸ்ரீ நிஷா, எம்சி சனா உள்ளிட்ட பாடகர்கள், பாடகிகள் பாடுகிறார்கள். முதன் முறையாக வெளிநாட்டு பாணியில் 360 டிகிரி வடிவிலான மேடையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் 35 க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெறுகிறது அதில் 15க்கும் மேற்பட்ட பாடல்களை யுவன் சங்கர் ராஜாவே பாடுகிறார்.
இதுகுறித்து யுவன் சங்கர் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த முறை சென்னையில் இசை நிகழ்ச்சி நடக்கும் போது, எனக்கும், ரசிகர்களுக்கும் இடையே சிறிய இடைவெளி விட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடமிருந்து சற்று தள்ளி இருக்கிறோமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. இதனால் ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விரும்பினேன். அதனால் 360 டிகிரி மேடையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த புது அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன்.
எனது இசை பயணத்தில் நான் பிசியாக இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் என் வேலையை செய்து கொண்டிருக்கிறேன். என்னை பற்றி வரும் விமர்சனங்களை இலகுவாக எடுத்துக் கொள்வேன். அவற்றை கவனிப்பேன். என்னுடைய பாடல்கள் எல்லாமே ஹிட்டாவதில்லை. மக்களுக்கு சில பாடல்கள் பிடிக்காமல் போகிறது. அது ஏன் என்பதை விமர்சனங்கள், ரசிகர்களின் கமெண்டுகள் மூலம் அறிந்து கொண்டு என்னை மாற்றிக் கொள்வேன். என்றார்.