300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
எஸ்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ஜெகதீஸ் தயாரித்துள்ள படம் 'மெட்ராஸ்காரன்'. 'ரங்கோலி' பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கி உள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகம் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடன் கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா தத்தா, இயக்குனர் வாலியை தயாரிப்பாளரிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்பு பெற்று கொடுத்தது தான் தான் என்றார்.
மேலும் அவர் பேசியதாவது: தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம். பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன். ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார். மிக அருமையாக இருந்தது, அந்த படத்தில் நான் நடித்தேன். படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் எனது நண்பர், மனிதாபிமானமிக்கவர். அவரிடம் என்னுடைய எல்லா விஷயத்தையும் சொல்வேன். அப்படித்தான் இந்த படத்தின் இயக்குனர் வாலி பற்றியும், அவரிடமிருந்த 'மெட்ராஸ்காரன்' கதை பற்றியும் சொன்னேன். அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச தயாரிப்பாளர். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். என்றார்.