கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
ஒரு திரைப்படத்தை அதில் உள்ள கதை, கதாபாத்திரங்கள், பாடல்கள், நடிப்பு ஆகியவற்றை விடவும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி அதனால் கிடைக்கும் இலவச விளம்பரம் மூலம் ஓட வைக்கலாம் என்று தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் சிலர் ஆலோசனை சொல்கிறார்களாம். அதன் காரணமாகத்தான் சமீபகாலப் படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது, பெண்கள் மீதான வன்மம் உள்ளிட்டவற்றை வேண்டுமென்றே வைக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
யு-டியுப் தளங்களில் அப்படியான காட்சிகளுக்கு சென்சார் கிடையாது. படத்திற்கு சென்சார் வாங்கும் போது அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கவும், வெட்டவும் படக்குழுவினர் சம்மதித்துவிடுவார்களாம். அதுவரையில் சர்ச்சை மூலம் பரபரப்பு ஏற்பட்டு அதனால், படத்தைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அதிகம் பதிவு போட வைக்கிறார்களாம். இதற்கென்றே சிறப்பு குழுக்கள் வேலை செய்கிறதாம்.
விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் அப்படியான சர்ச்சை அதிகம் ஏற்பட்டது. டிரைலரில் கெட்ட வார்த்தை ஒன்றையும் பயன்படுத்தி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். தனுஷின் சில படங்களின் முதல் பார்வை போஸ்டர்களிலும் புகை பிடிக்கும்படி இருந்து பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது சூர்யாவின் 44வது படத்திற்காக நேற்று வெளியான வீடியோ ஒன்றிலும் அவர் புகைபிடித்த காட்சி இடம் பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது 'மது விலக்கு கொள்கை' பற்றி குறிப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை விட்டு தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து 'இனி ஒரு விதி செய்வோம், அதை எந்நாளும் காப்போம்' என்று முடித்திருந்தார் சூர்யா.
இப்போது தனது பிறந்தநாள் என்றாலும் பரவாயில்லை புகை பிடிக்கும் வீடியோவை வெளியிட்டு அவர் சொன்னதை அவரே காப்பாற்றத் தவறி விட்டாரே என்று கிண்டலடிக்கிறார்கள்.