மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
90ஸ் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வளம்வந்தவர் நடிகை ரம்பா. டாப் இடத்தில் இருக்கும்போது சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார். அதற்கு பிறகு சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்ட இவர் தினமலர் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என என் குழந்தைகள் கேட்டு வந்தனர். அதனை விஜயிடம் தெரிவித்தேன். அதன்படி, சமீபத்தில் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் குழந்தைகள் அவரின் ரசிகர்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ‛நினைத்தேன் வந்தாய்' படத்தில் நான் நடித்தபோது பார்த்த அதே போலவே இப்போதும் விஜய் அதே போன்று இருக்கிறார். ஆனால் அந்த படத்தில் நடித்தபோது அமைதியாக இருப்பார், இப்போது என் குழந்தைகளுடன் நன்றாக பேசி பழகினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது நான் கனடாவில் இருந்தேன். அவர் அரசியலுக்கு வருவது துணிச்சலான முடிவு. நான் சினிமாவில் நடித்து 25 ஆண்டுகள் ஆனாலும், நீண்ட இடைவெளி விட்டுவிட்டேன். பெரும்பாலான பிடித்த ஹீரோக்களுடன் ஏற்கனவே நடித்துவிட்டேன். இந்தாலும், இனிமேல், நடிப்பதென்றால் பிடித்தமான ஹீரோ, பிடித்தமான ரோல் கிடைத்தால் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.