என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. அக்., 10ல் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து இப்போது வருகிறார் சூர்யா. இதன்பிறகு வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் கன்னட நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மப்டி என்ற கன்னட படத்தை இயக்கிய நார்தன் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த மப்டி படம் தான் தமிழில் சிம்பு நடிக்க ‛பத்து தல' என்ற பெயரில் ரீ-மேக்கானது. முதலில் பத்து தல படத்தை நார்தன் தான் இயக்கினார். சில பிரச்னைகளால் அவர் வெளியேற கிருஷ்ணா இயக்கினார்.