இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
சிவா இயக்கத்தில் ‛கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. அக்., 10ல் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து இப்போது வருகிறார் சூர்யா. இதன்பிறகு வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் கன்னட நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மப்டி என்ற கன்னட படத்தை இயக்கிய நார்தன் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த மப்டி படம் தான் தமிழில் சிம்பு நடிக்க ‛பத்து தல' என்ற பெயரில் ரீ-மேக்கானது. முதலில் பத்து தல படத்தை நார்தன் தான் இயக்கினார். சில பிரச்னைகளால் அவர் வெளியேற கிருஷ்ணா இயக்கினார்.