பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
விஜய் நடித்த தமிழன் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். அதையடுத்து 100 படங்களுக்கு மேல் அவர் இசை அமைத்து விட்டார். இந்த நிலையில், தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து ஒரு கருத்து கூறியிருக்கிறார். அதில், நமக்கு பிடித்தமான காதலி மனைவி ஆவார் என்பது சந்தேகம். அதே போன்று மனைவி நல்ல காதலியாகவும், நமக்கு பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை . அதேபோல் நமது குழந்தைகள் நம்முடைய செல்வம் என்று வளர்க்கிறோம். என்றாலும் அதுவும் ஒரு கட்டத்தில் மாறிவிடுகிறது. நல்ல பெற்றோருக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை. நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர் அமைவதில்லை. இதுதான் நிலைப்பாடாக இருக்கிறது. இமான், இசைத்துறையில் ஒரு சாதாரண கலைஞராக இருந்தாலே போதும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இசையமைப்பாளர் ஆகிவிட்டேன். இது அந்த கடவுள் கொடுத்த வாய்ப்பு என்று கூறி இருக்கிறார் .