சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
விஜய் நடித்த தமிழன் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். அதையடுத்து 100 படங்களுக்கு மேல் அவர் இசை அமைத்து விட்டார். இந்த நிலையில், தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து ஒரு கருத்து கூறியிருக்கிறார். அதில், நமக்கு பிடித்தமான காதலி மனைவி ஆவார் என்பது சந்தேகம். அதே போன்று மனைவி நல்ல காதலியாகவும், நமக்கு பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை . அதேபோல் நமது குழந்தைகள் நம்முடைய செல்வம் என்று வளர்க்கிறோம். என்றாலும் அதுவும் ஒரு கட்டத்தில் மாறிவிடுகிறது. நல்ல பெற்றோருக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை. நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர் அமைவதில்லை. இதுதான் நிலைப்பாடாக இருக்கிறது. இமான், இசைத்துறையில் ஒரு சாதாரண கலைஞராக இருந்தாலே போதும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் இசையமைப்பாளர் ஆகிவிட்டேன். இது அந்த கடவுள் கொடுத்த வாய்ப்பு என்று கூறி இருக்கிறார் .