பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மலையாள சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையாக இப்போதும் போற்றப்படுகிறவர் பிரேம் நசீர். 610 படங்களில் ஹீரோவாக நடித்து சாதனை படைத்தவர். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை. 1952ம் ஆண்டு 'மருமகள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரேம் நசீர், தமிழில் 34 படங்களில் நடித்துள்ளார். 1979ம் ஆண்டு 39 படங்களில் நடித்து சாதனை படைத்தார். இன்னொரு சாதனை என்ன தெரியுமா? 35 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
அவர் உச்சத்தில் இருந்தபோது ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட்கள் கொடுத்து 16 மணி நேரம் தொடர்ச்சியாக நடித்தார். ஒரு நாளில் 3 படங்களில் நடித்தாலும் அந்த 3 படத்தின் கேரக்டரையும் மனதில் வைத்து எந்த ஒத்திகையும் இல்லாமல் நடித்து விடுவாராம். ஒரு படம் தோல்வி அடைந்து அந்த தயாரிப்பாளர் நஷ்டமடைந்து விட்டால் அதே தயாரிப்பாளருக்கு இன்னொரு படம் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பது பிரேம் நசிர் ஸ்டைல். அதனால்தான் அவரால் 600 படங்களுக்கு மேல் நடித்து சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.