ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகன்நாத். இவர் கடைசியாக விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கிய லைகர் திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து ஐ ஸ்மார்ட் என்கிற வெற்றி படத்தை கொடுத்திருந்த பூரி ஜெகன்நாத் அதன் இரண்டாம் பாகமாக டபுள் ஐ ஸ்மார்ட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக காவ்யா தாபர் நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம் பெற்ற ஸ்டெப்பமார் என்கிற முதல் பாடல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாடலாக மார் முந்தா சோட் சிந்தா என்கிற பாடல் வெளியானது. ஆனால் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் தெலுங்கானாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் அடிக்கடி பேசும் ஒரு முக்கிய வசனத்தை கிண்டல் அடிக்கும் விதமாக இடம் பெற்றுள்ளதாக தற்போது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து அந்த கட்சியைச் சேர்ந்த தலைவர் ரஜிதா ரெட்டி என்பவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் படக்குழுவினருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.