துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
மலையாள திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆசிப் அலி. அதேபோல என்னு நிண்டே மொய்தீன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த சீனியர் இசை அமைப்பாளர் ரமேஷ் நாராயண். பிரபல கதாசிரியரும் இயக்குனருமான எம்டி வாசுதேவன் கதைகளை வைத்து மம்முட்டி, மோகன்லால், கமல், பஹத் பாசில் உள்ளிட்டோர் தனித்தனியாக நடித்துள்ள மனோரதங்கள் என்கிற ஆந்தாலாஜி படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆசிப் அலியும், ரமேஷ் நாராயணும் கலந்து கொண்டனர். அப்போது ரமேஷ் நாராயணுக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கும்படி ஆசிப் அலியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் ஆசிப் அலியிடம் இருந்து அதைப்பெற்றுக் கொள்ள விரும்பாத ரமேஷ் நாராயண் அதை அவரிடமிருந்து பிடுங்கி அருகில் இருந்த இயக்குனர் ஜெயராஜிடம் கொடுத்து, பின்னர் அவர் கைகளில் இருந்து பெற்றுக் கொண்டார்.
அவரது இந்த செயல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. சோசியல் மீடியாவில் பலரும் அவரை தாக்கி பதிவிட துவங்கினர். இதனைக் கண்டு ரமேஷ் நாராயண் தனது செயலுக்காக ஆசிப் அலியிடம் வருத்தம் தெரிவிப்பதாக பொது வெளியில் கூறினார். ஆனால் ஆசிப் அலியோ இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க தேவையில்லை என்றும் அவர் நடந்து கொண்டதை வைத்து ரசிகர்கள் அவர் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், அதை நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன், இதை இத்தோடு விட்டு விடுங்கள் என்றும் கூற அதன் பிறகு ஓரளவுக்கு இந்த சர்ச்சையின் தீவிரம் குறைந்தது.
அவரது இந்த பக்குவமான செயல்பாட்டுக்கு ரசிகர்களும் சிறையில் சேர்ந்த சிலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ள நிலையில் நடிகை அமலாபாலும் அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அமலா பால் கூறும்போது, “இந்த விஷயத்தை ஆசிப் அலி எவ்வாறு கையாண்டார் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வாழ்க்கையில் எதிர்பாராத சவால்கள் எழுந்து கொண்டு தான் இருக்கும். அதை ஒருவர் எப்படி கையாளுகிறார் என்பதுதான் விஷயமே” என்று கூறியுள்ளார்.
ஆசிப் அலி மற்றும் அமலா பால் இருவரும் விரைவில் வெளியாக உள்ள லெவல் கிராஸ் படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.