அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
வெளிமாநிலங்களில் இருந்து திடீர் திடீரென கவர்ச்சி நடிகைகள் வருவது வழக்கம். லேட்டஸ்டாக சன்னி லியோனை சொல்லலாம். அந்த வரிசையில் மும்பையில் இருந்து வந்த கவர்ச்சி நடிகை ரதி தேவி. சின்ன சின்ன படங்களில் கவர்ச்சியாக நடித்தார். ஆர்.கே.சண்முகம் இயக்கத்தில் ஜெய் கணேஷிற்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து 1979ம் ஆண்டில் வெளிவந்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட படம் 'பாப்பாத்தி'. இது மும்பை சிவப்பு விளக்கு பகுதிக்கு கடத்தப்பட்ட ஒரு பெண், பின்னர் நடிகையாக ஜெயித்த கதை. இது ரதி தேவியின் உண்மை கதை என்றும் அப்போது பேசப்பட்டது.
1981ம் ஆண்டு ஆர்.பட்டாபிராமன் இயக்கத்தில் அர்ஜூன், ரவீந்தருடன் 'அந்த உறவுக்கு சாட்சி' என்ற படத்தில் நடித்திருந்தார். இதே ஆண்டு விஜயசாரதியின் இயக்கத்தில் ராஜேசுடன் 'வெளிச்சத்துக்கு வாங்க' என்ற படத்திலும் நடித்திருந்தார். 1984ம் ஆண்டு ஏ.சண்முகம் இயக்கத்தில் சிவச்சந்திரன் கதாநாயகனாகவும், இவர் கதாநாயகியாகவும் நடித்த படம் 'அந்த ஜூன் 16-ஆம் நாள்' திகில் கலந்த ஆக்ஷன் படமாக இது உருவாகி இருந்தது. இதில் ரதி தேவி ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார்.
அதன்பிறகும் ஒரு சில படங்களில் நடித்த ரதி தேவி வாய்ப்புகள் குறையவே மும்பைக்கே திரும்பிவிட்டர். பின்னர் அவரை பற்றிய எந்த தகவலும் இல்லை.