மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாபி சிம்ஹா வில்லனாக நடித்த ‛மெட்ரோ' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். அதை தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, பிளடி மணி, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலியான ஹஸ்னா என்பவருக்கும் சமீபத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் மணமேடையில் மணமக்களுக்கு சிம்பு கூறிய அறிவுரை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வில் சிம்பு பேசும்போது, “மணமகன் சிரிஷ் தான் கரம் பிடித்துள்ள பெண்ணை அவரது வீட்டில் அவரது தந்தை எப்படி அன்பு செலுத்தி கவனித்து இருப்பாரோ அதேபோன்று அன்பை செலுத்த வேண்டும். அதேபோல மணப்பெண்ணும் தனது தந்தை மீது எந்த அளவிற்கு அன்பும் மரியாதையும் செலுத்துவாரோ அதேபோல தனது கணவனுக்கும் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.