தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' |
பாபி சிம்ஹா வில்லனாக நடித்த ‛மெட்ரோ' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். அதை தொடர்ந்து ராஜா ரங்குஸ்கி, பிளடி மணி, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலியான ஹஸ்னா என்பவருக்கும் சமீபத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இதில் மணமேடையில் மணமக்களுக்கு சிம்பு கூறிய அறிவுரை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வில் சிம்பு பேசும்போது, “மணமகன் சிரிஷ் தான் கரம் பிடித்துள்ள பெண்ணை அவரது வீட்டில் அவரது தந்தை எப்படி அன்பு செலுத்தி கவனித்து இருப்பாரோ அதேபோன்று அன்பை செலுத்த வேண்டும். அதேபோல மணப்பெண்ணும் தனது தந்தை மீது எந்த அளவிற்கு அன்பும் மரியாதையும் செலுத்துவாரோ அதேபோல தனது கணவனுக்கும் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.