மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஆராதானா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ள நிலையில் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த குழந்தைக்கு ‛பவன்' என பெயரிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
தனது இல்லத்தில் குழந்தைக்கு நடந்த பெயர் சூட்டும் விழா தொடர்பான வீடியோவை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் தனது மூன்று குழந்தைகள் பெயரான Aaradhana - Gugan - PAVAN என குறிப்பிட்டு ஹார்ட்டின் இமோஜியை பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.