இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்து இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஆராதானா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ள நிலையில் சமீபத்தில் மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது இந்த குழந்தைக்கு ‛பவன்' என பெயரிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
தனது இல்லத்தில் குழந்தைக்கு நடந்த பெயர் சூட்டும் விழா தொடர்பான வீடியோவை பகிர்ந்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் தனது மூன்று குழந்தைகள் பெயரான Aaradhana - Gugan - PAVAN என குறிப்பிட்டு ஹார்ட்டின் இமோஜியை பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.