நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் |
தமிழில் பிரபு, ரேவதி நடித்த அரங்கேற்ற வேளை, முரளி நடித்த உன்னுடன், விக்ரம் நடித்த காசி உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் பிரபல மலையாள தயாரிப்பாளரான அரோமா மணி. 65 வயதான இவர் நேற்று தனது இல்லத்தில் திடீரென மரணத்தை தழுவியுள்ளார். மலையாளத்தில் அதிக அளவில் படங்களை தயாரித்துள்ள இவர் கிட்டத்தட்ட தமிழையும் சேர்த்து 60 படங்களை தயாரித்து உள்ளார். ஒரு இயக்குனராக ஏழு படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு பக்கம் திங்களாழ்ச்ச நல்ல திவசம், தூரே தூரே ஒரு கூடு கூட்டாம் என அடுத்தடுத்த வருடங்களில் தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்த இவர் இன்னொரு பக்கம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு, இருபதாம் நூற்றாண்டு, கமிஷனர் எப்ஐஆர் உள்ளிட்ட கமர்சியல் படங்களையும் தயாரித்து வெற்றி பெற்றார். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, திலீப், சுரேஷ்கோபி, பிரித்விராஜ் என பலருடைய படங்களையும் தயாரித்துள்ளார்.
குறிப்பாக மம்முட்டிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அவரை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திய ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தை தயாரித்து அதன் 5 பாகங்கள் அடுத்தடுத்து வெளியாக வித்திட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2013ல் பஹத் பாசில் நடித்த ஆர்டிஸ்ட் என்கிற படத்தை தயாரித்ததுடன் படத்தயாரிப்பில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.