குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் |
மிகப்பெரிய வெற்றி பெற்ற 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் 'புஷ்பா : தி ரூல்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடித்து வருகிறார்கள். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரிலீசுக்கு முன்பே இந்த படம் 250 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது “புஷ்பா தி ரூல் படம் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் மூலம் 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, சமீபகாலமாக தியேட்டர் வசூல் குறைந்துள்ள சூழ்நிலையில், 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படம் 'கேஜிஎப் 2' படத்தை விட பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டித் தரும். 'புஷ்பா 2' வெளியாகி தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் பல புதிய சாதனைகளை படைக்கும்” என்கிறார்.