நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் உலக இசை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக வருகிற 27ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட தற்போது ரஹ்மான் மலேசியா சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்த அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்னர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், "மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். இந்த சந்திப்பின்போது இசை, கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் பற்றி உரையாடினோம்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தியன் 2' புரமோசன் பணிகளுக்காக மலேசியா சென்ற கமல்ஹாசன், மலேசிய பிரதமரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.