'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் | த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் என பரவும் தகவல் |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் உலக இசை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக வருகிற 27ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட தற்போது ரஹ்மான் மலேசியா சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்த அவர் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் கேட்டறிந்தார்.
பின்னர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரகுமான், "மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். இந்த சந்திப்பின்போது இசை, கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் பற்றி உரையாடினோம்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தியன் 2' புரமோசன் பணிகளுக்காக மலேசியா சென்ற கமல்ஹாசன், மலேசிய பிரதமரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.