தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா, 'பலே பாண்டியா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் உள்பட பல படங்களில் நடித்தார். அவர் முதன் முறையாக சோலோ ஹீரோயினாக நடிக்கும் படம் 'றெக்கை முளைத்தேன்'. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தயாரித்து, இயக்குகிறார். பின்னணி இசையை தரண்குமார் அமைக்க, பாடல்களுக்கு தீசன் இசையமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது “இது நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம். எனது முதல் தயாரிப்பு என்பதால் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன். படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்” என்றார்.