சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தன்யா, 'பலே பாண்டியா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் உள்பட பல படங்களில் நடித்தார். அவர் முதன் முறையாக சோலோ ஹீரோயினாக நடிக்கும் படம் 'றெக்கை முளைத்தேன்'. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தயாரித்து, இயக்குகிறார். பின்னணி இசையை தரண்குமார் அமைக்க, பாடல்களுக்கு தீசன் இசையமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போது “இது நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம். எனது முதல் தயாரிப்பு என்பதால் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன். படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்” என்றார்.