இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பாலிவுட்டில் வித்தியாசமான நடிகர் என பெயர் எடுத்தவர் பங்கஜ் திரிபாதி. இவரது மிர்சாபூர் தொடர் இப்போது மூன்றாவது சீசன் எட்டி உள்ளது. வரும் ஜூலை 5 முதல் ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாக உள்ளது. அவருடன் அலி பைசல், ஸ்வேதா திரிபாதி, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குர்மீத் சிங் மற்றும் ஆனந்த் ஐயர் இயக்கி உள்ளனர். இந்த தொடரின் புரொமோஷன் போது பங்கஜ் அளித்த பேட்டி :
டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு பற்றி குறிப்பாக அந்த கடைசி 10 நிமிடத்தில் வரும் உங்கள் காட்சிகள் பற்றி?
எங்கள் படைப்பையும், தொடரின் டிரைலரையும் ரசிகர்கள் விரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களிடம் இருந்து பெறும் அன்பினால் வியப்பும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.
பல கேரக்டர்களில் நடித்துள்ளீர்கள், நிஜ வாழ்க்கையில் உங்களது கேரக்டரில் யாராவது நடித்திருக்கிறீர்களா?
பொதுவாக நான் நடந்து செல்லும் போதெல்லாம் என் கதாபாத்திரத்தைப் பற்றி யோசித்து அதை தெரியாத ஒருவர் மீது பயன்படுத்தி, அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை அறிய முயற்சிப்பேன். ஒரு வாரத்திற்கு முன்பு, நான் நடந்து செல்லும்போது ஒரு பையன் வந்து, பங்கஜ் திரிபாதி என்று சொன்னான். உடனே என் கேரக்டர் மாதிரி ஒரு லுக் கொடுத்து கிளம்பிவிட்டான். ஒவ்வொரு நாளும் புன்னகையுடன் பலரையும் கடக்கிறேன். என்றாலும், அன்று என் கதாபாத்திரங்களில் ஒருவரை நான் சந்தித்ததை நினைத்து மகிழ்ந்தேன்.
எதிர்காலத்தில் மிர்சாபூர் சீரிஸ் மக்கள் மனதில் இருக்கும் என நினைக்கிறீர்களா?
இந்த தொடரின் பார்வையாளர்கள் மாறுபட்டவர்கள் என்பதால் இன்றைய தலைமுறையினர் கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பார்கள். இன்னும் 15 - 20 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் கொள்வார்கள். இந்த தொடரை அமெரிக்காவில் இருப்பவரும் விரும்புகிறார். காஜிபூரைச் சேர்ந்த பானி பூரி விற்பனையாளரும் விரும்புகிறார். இந்தத் தொடரின் பார்வையாளர்கள் மாஸ் மற்றும் கிளாஸ் ஆனவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.