காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு. 1997ல் வெளிவந்த 'அரவிந்தன்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாமனார். 'சேது, நந்தா, ஜெயம், திருமலை, வாரணம் ஆயிரம், எந்திரன், எதற்கும் துணிந்தவன்” உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். தற்போது தெலுங்கில் 'தேவரா' படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
'இந்தியன் 2' படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரவி வர்மன் 'பொன்னியின் செல்வன்' படத்திற்குச் சென்றதால் ரத்தினவேலு ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றார். சில கட்டப் படப்பிடிப்புகளில் பணியாற்றிய பின் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகவே அவரும் விலகினார். பின்னர் ரவி வர்மன் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
நேற்று இப்படத்தின் 'காலண்டர்' பாடல் வெளியானது. பாடலைப் பார்த்த பலரும் பாடல் படமாக்கப்பட்ட இடமும் ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டினார்கள்.
அதையடுத்து ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு அவரது எக்ஸ் தளத்தில், “அனிருத்தின் இசையில் உருவான இந்த அழகான பாடலை 'இந்தியன் 2' படத்திற்காக பொலிவியா-வில் படமாக்கினோம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அதன்பிறகே அவர்தான் அந்தப் பாடலை அற்புதமாகப் படமாக்கியவர் என்பது ரசிகர்களுக்குத் தெரிய வந்தது. யு டியூப் வீடியோவிலும் அப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்தது ரத்தினவேலு என்று குறிப்பிடப்படவில்லை. படத்தின் போஸ்டர்களிலும் அவரது பெயர் இதுவரை இடம் பெறவில்லை. இது குறித்து ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.