காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ஒரே சமயத்தில் இரண்டு பீரியட் படங்களைத் தயாரித்து வருகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் 'தங்கலான்' படம், சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் 'கங்குவா' ஆகிய இரண்டு படங்கள்தான் அவை.
இந்த இரண்டு படங்களில் 'கங்குவா' படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், 'தங்கலான்' படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்காமல் உள்ளார்கள். ஆனால், ஆகஸ்ட் 15ல் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு படங்களைப் பற்றி அதில் பணியாற்றியுள்ளவர்கள் பில்ட்அப் கொடுத்துள்ளார்கள்.
'தங்கலான்' படம் பற்றி அதன் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், “தங்கலான்' பின்னணி இசை முடிவடைந்தது. எனது சிறந்ததைக் கொடுத்துள்ளேன். என்ன ஒரு படம். எதிர்பார்க்கிறேன். அற்புதமான டிரைலர் ஒன்று விரைவில் வர உள்ளது. உங்களை பிரமிக்க வைக்கப் போகிறது. இந்திய சினிமாவே 'தங்கலான்' படத்திற்காக தயாராக இரு,” என்று குறிப்பிட்டுள்ளார்.
'கங்குவா' படம் பற்றி அதற்குப் பாடல் எழுதியுள்ள விவேகா, “கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவின் பெருமைமிகு பிரம்மாண்டம். இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார். சூர்யா சாரின் நடிப்பு உச்சம். இந்த சிறந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
இரண்டு பேரும் அடுத்தடுத்து பதிவிட்டுள்ள அந்தப் படங்களுக்கு சரியான பில்ட்அப்பைக் கொடுத்துள்ளது.