இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
சினிமா விழா என்றாலே நடிகர்களின் பவுன்சர்கள் பத்திரிகையாளர்களையும், ரசிகர்களையும் தடுப்பதையும் சமயங்களில் தாக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
நேற்று நடந்த விஜய் நிகழ்ச்சியில் துபாயில் இருந்து வந்த சிறப்பு பவுன்சர்கள், மற்றும் உள்ளூர் பவுன்சர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழக காவல் துறையினர் நிகழ்ச்சி நடந்த மண்டபத்திற்கு வெளியில் இருந்தனர்.
நேற்று இரவு விஜய்யின் ரசிகர்கள் இருவர் விஜய்யை தூரத்திலிருந்தாவது பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நீண்ட நேரமாகக் காத்திருந்துள்ளனர். அவர்களிடம் சென்ற உள்ளூர் பவுன்சர் ஒருவர் அவர்களை மரியாதைக் குறைவாகப் பேசி அங்கிருந்து விரட்ட முயற்சித்துள்ளார். அதை சில டிவி செய்தியாளர்கள் வீடியோ எடுத்துள்ளனர். உடனே, அந்த செய்தியாளர்களை நோக்கி அந்த பவுன்சர் பாய்ந்துள்ளார்.
பின்னர் டிவி செய்தியாளர்கள் அனைவரும் அந்த பவுன்சர் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என மண்டபத்தின் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் திருவான்மியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் தவெக நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதன்பின்பு ரசிகர்களையும், செய்தியாளர்களையும் அடிக்கப் பாய்ந்த அந்த பவுன்சர் வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
விஜய் தற்போது தனக்கென பாதுகாப்பு பணியில் ஈடுபட சில சிறப்பு பவுன்சர்களை வேலைக்கு சேர்த்துள்ளாராம். அந்த பவுன்சர்களை மீறி விஜய்யை இனி எந்த ஒரு ரசிகரும் நெருங்க முடியாது என்பது கூடுதல் தகவல்.