லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து நாயகனாக நடித்த படம் நல்லதம்பி. 1949ம் ஆண்டு வெளியானது. இதன் கதை, திரைக்கதையை எழுதியவர் அண்ணாதுரை. 1936ம்ஆண்டு வெளியான 'மிஸ்டர்டீட்ஸ் கோஸ்டுடவுன்' என்கிற ஆங்கில படத்தைப் பார்த்த என்.எஸ்.கிருஷ்ணன், அதைத்தழுவி ஒருகதை எழுதித்தருமாறு அண்ணாதுரையிடம் சொல்ல அவர் எழுதிக் கொடுத்த படம்தான் 'நல்லதம்பி'. இதுதான் அண்ணாதுரைக்கு முதல் திரைப்படம். டைட்டிலில், கதை, வசனம் அண்ணாதுரை எனப் போட்டார்கள்.
படத்திற்கு சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்திருக்கிறார். கிருஷ்ணன் - பஞ்சு இரட்டையர் இயக்கி, இருக்கிறார்கள். பிற்காலத்தில் 'ப' வரிசைப் படங்களை இயக்கி குவித்த பீம்சிங் இந்த படத்தில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
என்.எஸ்.கிருஷ்ணன் ஜோடியாக டி.ஏ.மதுரம் நடித்திருந்தார். பானுமதி, எஸ்.வி.சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, நாராயணசாமி, புளிமூட்டை ராமசாமி, காக்கா ராதாகிருஷ்ணன், வி.எஸ்,ராகவன், எம்.என்.ராஜம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
மக்களுக்காக சேவை செய்து வரும் ஒருவனுக்கு திடீரென ஜமீன்தாரராகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வான் என்பது தான் படத்தின் கதை.