புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழை போலவே மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று சென்று கொண்டிருக்கிறது. கடந்த ஆறு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழில் கமல் எப்படியோ அதுபோல மலையாள பிக்பாஸின் முகமாகவே மோகன்லால் மாறிவிட்டார். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் நூறாவது நாளை தொட்டு கடந்த ஞாயிறு அன்று அதன் பைனலும் நடைபெற்றது. இந்த ஆறாவது சீசனின் வெற்றியாளராக ஜின்டோ என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றியாளரை அறிவித்த பின்னர் மோகன்லால் பார்வையாளர்களிடம் பேசும்போது, “நீங்கள் ஏன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறீர்கள் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் என்னுடைய படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக உங்களை கவர்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் தான் நான் மோகன்லாலாகவே உங்களை கவர்ந்து பொழுதுபோக்க செய்ய வேண்டிய சவால் இருக்கிறது. அதனாலேயே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எனக்கு பிடித்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.