மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விடுதலை படத்தை அடுத்து சூரி நாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இவர் இதற்கு முன்பு தனுஷ் நடித்த சீடன் படத்தில் தமிழில் அறிமுகமானார். மேலும் இந்த கருடன் படத்திற்கு பிறகு சில புதிய தமிழ் படங்களில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் மலையாளத்தில் மார்கோ என்ற படத்தில் தற்போது ஹீரோவாக நடித்திருக்கிறார் உன்னி முகுந்தன். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டரை கருடன் இயக்குனர் துரை செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த போஸ்டரில் ரத்தம் வழியும் கத்தியை தனது வாயில் கடித்தபடி, ரத்தம் தெறிக்க வெறித்தனமாக நின்று கொண்டிருக்கிறார் உன்னி முகுந்தன்.