22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
ஹனிப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன், சித்திக், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடித்து கடந்தாண்டில் வெளியான மலையாளப் படம் 'மார்க்கோ'. அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்ததால் இந்த படத்தை பலரும் விமர்சித்தனர். ஆனாலும் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
மார்கோ இரண்டாம் பாகம் உருவாவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் மார்கோ இரண்டாம் பாகம் குறித்து உன்னி முகுந்தனுக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதிலில், ‛‛மார்கோ 2ம் பாகம் உருவாகவில்லை. அந்த படத்தை சுற்றி ஏகப்பட்ட நெகட்டிவ் ஆன சூழல் நிலவியதால் இந்த படத்தை கை விடுகிறோம். ஆனால், மார்கோ 2 படத்தை விட வேறொரு சிறந்த படத்தை கொடுக்க விரும்புகிறேன். அது பெரிய படமாக, நல்ல படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.