படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

'உழைப்பே உயர்வுக்கு வழி' என்பது எக்காலத்திற்கும் பொருந்தும். ஒரு காலத்தில் தியேட்டரில் வாழைப்பழக் கடை நடத்தியவரின் மகன் இன்று பான் இந்தியா ஸ்டார் நடிக்கும் படத்தின் இயக்குனர் என்பது எவ்வளவு பெருமையான விஷயம்.
அப்படி ஒரு பெருமையைப் பெற்றுள்ளவர் இயக்குனர் மாருதி. இன்று டீசர் வெளியாகும் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தின் இயக்குனர். இன்று டீசர் வெளியாவதை முன்னிட்டு காலையில் அவர் எக்ஸ் தளத்தில் தன்னைப் பற்றிப் பதிவிட்ட பதிவு ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
“மசூலிப்பட்டினம் - சிரி காம்ப்ளக்ஸ் (முன்பு கிருஷ்ண கிஷோர்).
இந்த இடத்தில்தான் எனது அப்பா சிறிய வாழைப்பழக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்தத் தியேட்டரில் வெளியாகும் எல்லா ஹீரோக்களின் படங்களின் பேனர்களுக்கும் நம்பிக்கையுடன் கனவு கண்டு எழுதுவேன்.
'ஒக்காசரைனா மன பெரு சூடலி இக்கடா' (ஒரு முறையாவது நம் பெயரை இங்கே பார்க்க வேண்டும்)' என்று விரும்பியவர்களில் நானும் ஒருவன்.
இப்போது இங்கே நின்று எல்லாம் எங்கிருந்து தொடங்கியது என்று திரும்பிப் பார்க்கிறேன்.
வாழ்க்கை முழு வட்டமாகிவிட்டது. இப்போது என் இந்திய நட்சத்திரத்தின் அருகில் ஒரு கட் அவுட்.
அது போதாதா?.
என் அப்பா இன்று மிகவும் பெருமைப்பட்டு இருப்பார். உங்களை மிஸ் செய்கிறேன் அப்பா. நான் இப்போது சுமக்கும் நன்றிக்கு மிகவும் சிறியதாக உணர்கிறேன்.
நமது காலத்தில், அனைத்து கடமைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையில்….
நான் இப்போதும் நம் அன்பை நான் கனவு கண்ட அம்சத்தில் முன் வைக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் தேவை,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.