தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் தனது காதலியான பவித்ரா கவுடாவை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த ரேணுகா சுவாமி என்பவரை கூலிப்படையை கொண்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் தர்ஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தான் செய்த கொலைக்கான பழியை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி மூன்று பேரிடம் தர்ஷன் தலா 5 லட்சம் கொடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் சட்டப்படி விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்றும், குற்றவாளிகள் இரக்கம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பெங்களூரு காவல் ஆணையர் பி.தயானந்தா தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த கொலையில் நடிகை பவித்ரா கவுடா உள்பட 12 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் விரைவில் நடிகை பவித்ரா கவுடா கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.