இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள மகாராஜா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்த விஜய்சேதுபதி அதன்பிறகு 19 (1) ஏ என்கிற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். இந்த இரண்டு படங்களும் அவருக்கு மலையாளத்தில் பெரிய வரவேற்பை தரவில்லை. என்றாலும் மலையாள படங்களின் மீதான அவரது ஆர்வமும் பிரமிப்பும் தற்போதும் குறையவில்லை.
குறிப்பாக அவர் கூறும்போது, “மலையாள திரையுலகம் தற்போது அதன் அற்புதமான காலகட்டத்தில் இருக்கிறது. சமீபத்தில் வெளியான எல்லா மலையாள படங்களையும் விடாமல் பார்த்து வருகிறேன். அதிலும் பிரேமலு திரைப்படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்தேன். அந்த படம் ரொம்பவே இனிமை. அதில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் மட்டுமல்லாது நடித்த அனைவருமே அற்புதமாக பங்களிப்பு செய்திருந்தனர். அது மட்டுமல்ல மம்மூட்டி நடித்த பிரம்மயுகம் படமும் என்னை வெகுவாக கவர்ந்தது” என்று கூறியுள்ளார்.