டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ரத்னம் என பல படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் திருவிளையாடல் படத்தில் தாய் தந்தையை சுற்றி வந்து விநாயகர் மாம்பழத்தை பெற்றுக்கொள்ள, உலகத்தையே சுற்றி விட்டு வரும் முருகப்பெருமாள் தனக்கு பழம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சியை பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர். அதன் உடன் ‛கடவுள் முருகனாகவே இருந்தாலும் வீட்டில் இரண்டாவது பிள்ளையாக பிறந்தால் இந்த நிலைதான் ஏற்படும் போல, என்னைப் போலவே இதே வேதனையை இன்னும் யாரெல்லாம் அனுபவித்துள்ளீர்கள்' என்ற ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார் பிரியா பவானி சங்கர். அவருடைய இந்த கேள்விக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பதிவிட்டுள்ளனர்.




