துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நிவின்பாலிக்கு ஜோடியாக 'நேரம்' என்கிற படத்தில் அறிமுகமான நடிகை நஸ்ரியா, முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர். அதைத் தொடர்ந்து பெங்களூரு டேஸ், ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய சமயத்தில், நடிகர் பஹத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.
இந்த நிலையில் சமீபகாலமாக செலெக்ட்டிவ்வான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நஸ்ரியா. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் உருவாகும் 'சூட்சும தர்ஷினி' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நஸ்ரியா. இந்த படத்தில் கதாநாயகனாக 'மின்னல் முரளி' இயக்குனரும் கடந்த வருடம் வெளியாகி வெற்றி பெற்ற 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' மற்றும் சமீபத்தில் வெளியான 'குருவாயூர் அம்பல நடையில்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடிக்கிறார்.
கடந்த 2018ல் மலையாளத்தில் வெளியான 'நான்சென்ஸ்' என்கிற படத்தை இயக்கிய எம்.சி.ஜிதின் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.