மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
யேசுதாசின் குரலை 'காந்த குரல்' என்பார்கள். அதேபோன்று பெண்களின் குரலில் காந்த குரல் கொண்டவர் ஜென்சி. ஒருவர் எந்த பாடலை பாடினாலும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிற குரலையே காந்த குரல் என்பார்கள். கேரளாவில் மேடைகளில் பாடிக்கொண்டிருந்த ஜென்சியை இளையராஜாவிடம் அழைத்து வந்தார் யேசுதாஸ்.
“ஒரு பொண்ணு இருக்காங்க. அற்புதமான குரல். நீங்க ஒரு தடவை கேளுங்க. பிடிச்சுருந்தா உங்க இசையில் பயன்படுத்திக்கங்க'' இதுதான் இளையராஜாவிடம், பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சொன்னது. திறமையற்றவர்களை யேசுதாஸ் பரிந்துரை செய்யமாட்டார் என்பதால் ஜென்சியை பாடகியாக ஏற்றார் இளையராஜா. 'திருப்புரசுந்தரி' என்ற படத்தில் முதல் பாடல். அது அதிக கவனம் பெறவில்லை. இரண்டாவது பாடல் 'முள்ளும் மலரும்' படத்தில் இடம்பெற்ற ''அடி பெண்ணே'' தான் ஜென்சியை அடையாளம் காட்டியது.
அறிமுகமான அந்த 1978ம் வருடத்திலேயே அடுத்தடுத்து 5 பெரிய படங்களில் பாடினார். அதில் ஒரு பாடல் பிரியா படத்தில் வரும் “என்னுயிர் நீதானே'' பாடல். அவரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யேசுதாசுடன் இணைந்து பாடிய அந்தப்பாடல்தான் ஜென்சியின் மனதுக்கு நெருக்கமான பாடல் என்று அவரே கூறியிருக்கிறார்.
அதன்பிறகு ஜென்சி பாடியது எல்லாமே தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்தான். இங்கிருந்த பி.சுசீலா, எஸ்.ஜானகிக்கு நிகராக வளர்ந்த ஜென்சி திடீரென காணாமல் போனார். ஒரு பாடல் பதிவுக்காக இளையராஜா அழைக்க, அவசர அவசரமாக கேரளாவில் இருந்து ரயிலில் கிளம்பினார் ஜென்சி. ரயில் தாமதமானதால் பாடல் பதிவு நேரத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. அந்த பாடலை வேறு பாடகியை வைத்து முடித்து விட்டார் இளையராஜா.
தாமதத்திற்கு மன்னிப்பு கேட்ட ஜென்சி, ரயில் தாமதம் பற்றி இளையராஜாவிடம் சொன்னார். “நீ ரயிலில் பாடி பிழைச்சுக்கோ” என்று இளையராஜா சொல்லிவிட அந்த வார்த்தையை தாங்க முடியாமல் வெளியேறியவர், கேரளாவுக்கே சென்று விட்டார். அதன்பிறகு சில பாடல்கள் பாடினாலும் இளையராஜாவை பகைத்து கொள்ள விரும்பாதவர்கள், ஜென்சியை புறக்கணித்தார்கள். பின்னர் அவர் வருங்கால இசை கலைஞர்களான மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுக்கும் பணியை தேர்வு செய்து கொண்டார்.