புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் அஞ்சலி. அவர் கதாநாயகியாக நடிக்கும் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற தெலுங்குப் படம் இந்த வாரம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. விஷ்வக் சென் கதாநாயகனாக நடித்துள்ள இப்டத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான புரமோஷன்களில் தற்போது பிஸியாக இருக்கிறார் அஞ்சலி.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. “கேம் சேஞ்சர்' படம் பற்றி நிறைய பேச ஆசை. ஆனால், நடிகர்கள் யாரும் அப்படத்தைப் பற்றி பேச அனுமதியில்லை. எந்த அப்டேட் ஆக இருந்தாலும் அது ஷங்கர் சார் மூலம்தான் வரும். இல்லையென்றால் தயாரிப்பாளர் தில் ராஜூ சார் சொல்வார். இப்படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன். நானும் ஒரு கதாநாயகிதான். விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்,” என பதிலளித்தார்.
தமிழில் அஞ்சலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படம் ஜுலை மாதம் வெளியாக உள்ளது.