மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் அஞ்சலி. அவர் கதாநாயகியாக நடிக்கும் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற தெலுங்குப் படம் இந்த வாரம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது. விஷ்வக் சென் கதாநாயகனாக நடித்துள்ள இப்டத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கான புரமோஷன்களில் தற்போது பிஸியாக இருக்கிறார் அஞ்சலி.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. “கேம் சேஞ்சர்' படம் பற்றி நிறைய பேச ஆசை. ஆனால், நடிகர்கள் யாரும் அப்படத்தைப் பற்றி பேச அனுமதியில்லை. எந்த அப்டேட் ஆக இருந்தாலும் அது ஷங்கர் சார் மூலம்தான் வரும். இல்லையென்றால் தயாரிப்பாளர் தில் ராஜூ சார் சொல்வார். இப்படத்தில் நானும் முக்கிய கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன். நானும் ஒரு கதாநாயகிதான். விரைவில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்,” என பதிலளித்தார்.
தமிழில் அஞ்சலி நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படம் ஜுலை மாதம் வெளியாக உள்ளது.