மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த 2022ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் சிரஞ்சீவி வைத்து ரீமேக் செய்தார் மோகன் ராஜா. அப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சல்மான் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிரஞ்சீவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் மோகன்ராஜா. பி.வி.எஸ். ரவி என்பவர் இந்த படத்திற்கு கதை எழுதும் நிலையில் தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும், அடுத்தபடியாக தனி ஒருவன்- 2 படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிரஞ்சீவி படத்தை இயக்கப் போவதால் அதை முடித்துவிட்டு அப்படத்தை அவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அதோடு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களுக்கு பிறகு அஜித் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார் மோகன் ராஜா.