ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
கடந்த 2022ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் சிரஞ்சீவி வைத்து ரீமேக் செய்தார் மோகன் ராஜா. அப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சல்மான் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிரஞ்சீவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் மோகன்ராஜா. பி.வி.எஸ். ரவி என்பவர் இந்த படத்திற்கு கதை எழுதும் நிலையில் தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும், அடுத்தபடியாக தனி ஒருவன்- 2 படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிரஞ்சீவி படத்தை இயக்கப் போவதால் அதை முடித்துவிட்டு அப்படத்தை அவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அதோடு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களுக்கு பிறகு அஜித் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார் மோகன் ராஜா.