இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பிரபல பின்னணி பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கி சுதித்ரா. இவர் நடிகர் கார்த்திக் குமாரை பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தர். பின்னர் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர்.
ஏற்கெனவே 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா, திடீரென கடந்த சில நாட்களாக பல யு டியூப் சேனல்களுக்கு பரபரப்பு பேட்டி கொடுத்து வந்தார். இதில் பல முன்னணி நடிகர்கள் பற்றி பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார். குறிப்பாக தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் 'ஓரின சேர்க்கையாளர்' என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சுசித்ராவிடம், 1 கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்திக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் “சுசித்ராவின் பேட்டி, சமுதாயத்தில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. என்னைப்பற்றியும், என்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கார்த்திக்குமார் குறித்து கருத்து தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி சுசித்ராவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை ஜூலை 1ம் தேதிக்கு தள்ளிவைத்தது.