'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுகளாக இசை ஆதிக்கம் செலுத்திய டி.எம்.சவுந்தர்ராஜன். அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். “சிவாஜி நடிப்பில் பெயர் பெற்றதற்கும், எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதற்கும் நான் பாடிய பாடல்கள்தான் காரணம்” என்று டி.எம்.சவுந்தராஜனே சொல்லியிருக்கிறார்.
டி.எம்.எஸ், எம்ஜிஆருக்கு பாடினால் அவர் பாடுவது போன்று இருக்கும், சிவாஜிக்கு பாடினால் அவர் பாடுவது போன்றே இருக்கும். இருவருக்கும் தனித்தனியாக குரலில் பாடுகிறார் என்று ரொம்ப காலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதனை டி.எம்.எஸ் மறுத்தார்.
மதுரையில் நடந்த ஒரு இசை விழாவில் இதுகுறித்து பேசும்போது, “நான் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் தனித்தனி குரலில் பாடுவதாக பேசப்படுவதில் உண்மையில்லை. இருவருக்கும் ஒரே குரலில்தான் பாடுகிறேன். அவர்கள் என்ன கேரக்டரில் நடிக்கிறார்கள், எந்த மாதிரியான சூழலில் அந்த பாடல் வருகிறது என்பதை உள்வாங்கி பாடுவதால் அந்த கேரக்டர் பாடுவது போன்று இருக்கும், அதாவது எம்ஜிஆர், சிவாஜி பாடுவது போன்று இருக்கும்” என்றார்.
இன்று அவரது 11வது நினைவுநாள்.