‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுகளாக இசை ஆதிக்கம் செலுத்திய டி.எம்.சவுந்தர்ராஜன். அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். “சிவாஜி நடிப்பில் பெயர் பெற்றதற்கும், எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றதற்கும் நான் பாடிய பாடல்கள்தான் காரணம்” என்று டி.எம்.சவுந்தராஜனே சொல்லியிருக்கிறார்.
டி.எம்.எஸ், எம்ஜிஆருக்கு பாடினால் அவர் பாடுவது போன்று இருக்கும், சிவாஜிக்கு பாடினால் அவர் பாடுவது போன்றே இருக்கும். இருவருக்கும் தனித்தனியாக குரலில் பாடுகிறார் என்று ரொம்ப காலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதனை டி.எம்.எஸ் மறுத்தார்.
மதுரையில் நடந்த ஒரு இசை விழாவில் இதுகுறித்து பேசும்போது, “நான் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் தனித்தனி குரலில் பாடுவதாக பேசப்படுவதில் உண்மையில்லை. இருவருக்கும் ஒரே குரலில்தான் பாடுகிறேன். அவர்கள் என்ன கேரக்டரில் நடிக்கிறார்கள், எந்த மாதிரியான சூழலில் அந்த பாடல் வருகிறது என்பதை உள்வாங்கி பாடுவதால் அந்த கேரக்டர் பாடுவது போன்று இருக்கும், அதாவது எம்ஜிஆர், சிவாஜி பாடுவது போன்று இருக்கும்” என்றார்.
இன்று அவரது 11வது நினைவுநாள்.




