இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே ஆதரவற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள் பலரை தத்தெடுத்து தனது சொந்த செலவில் படிக்க வைத்து அவர்களை ஆளாக்கி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மாற்றம் என்கிற அறக்கட்டளையை துவங்கி அதன் மூலம் ஆரம்பத்தில் பத்து விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்த உதவி செய்து வருகிறார். இதை பின்பற்றி பலரும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வம் என்கிற ரசிகர் ஒருவர் தீபாராதனை தட்டில் சூடம் ஏற்றி அதன் அடியில் தூரிகையை ஒட்டி வைத்து அதன் மூலம் சுவற்றில் லாரன்ஸ் படத்தை வரைந்து ஆச்சரிய படுத்தியுள்ளார். அதில் அவர் லாரன்ஸை மனித ரூபத்தில் இருக்கும் கடவுள் லாரன்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
இதை பார்த்துவிட்டு அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ள லாரன்ஸ், “உங்களுடைய கடின உழைப்பையும் திறமையையும் நான் பாராட்டுகிறேன். அதேசமயம் ஒரு சின்ன வேண்டுகோள்.. நீங்கள் சொல்வது போல நான் ஒன்றும் மனித கடவுள் அல்ல.. நான் மக்களுக்காக சேவை செய்கின்ற கடவுளின் வெறும் சேவகன் மட்டுமே. நீங்கள் இவ்வளவு பெரிய வார்த்தைகளை பயன்படுத்தியது உங்கள் அன்பை காட்டுகிறது. உங்களுடைய ஆச்சரியப்பட வைக்கும் தனி திறமைகளுக்காக உங்களை நான் விரைவில் சந்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.