சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி | 'டப்பா - ஆன்ட்டி' ரோல் சர்ச்சை…'அந்த' நடிகை மன்னிப்பு கேட்டார், சிம்ரன் | ஆண்கள் மட்டுமே நடித்துள்ள 'ஆகக் கடவன': நாளை ரிலீஸ் | மோகன்லாலின் வாழ்க்கை கதை புத்தகம்: டிசம்பரில் வெளியீடு | டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? |
தமிழ் சினிமாவில் சில சர்ச்சைகள், சில மோதல்கள் ஆகியவற்றை மறக்கவே முடியாது. அப்படியான மோதல்களாக இரண்டு மோதல்கள் கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வருகிறது. ஒன்று 'ஆளவந்தான்' படத்திற்குப் பிறகு தயாரிப்பாளர் தாணு, கமல்ஹாசன் இடையிலான மோதல். அந்தப் படம் படுதோல்வி அடைந்து தயாரிப்பாளர் தாணு அதிக நஷ்டமடைந்தார். அதனால், இருவருக்கும் மோதல் வந்தது.
இரண்டாவது இயக்குனர் விக்ரமன், விஜய் இடையிலான மோதல். விக்ரமன் இயக்கிய ‛உன்னை நினைத்து' என்ற படத்தில் விஜய் நடித்த போது மரத்தின் மீது ஏறி நடிக்க சொன்ன ஒரு காட்சிக்காக அவருடன் சண்டை போட்டு அந்தப் படத்திலிருந்தே விலகினார் விஜய். அதன்பின் அப்படத்தில் விஜய்க்குப் பதிலாக சூர்யா நடித்தார். 'பூவே உனக்காக' படத்தின் மூலம் விஜய்க்கு பெரும் திருப்புமுனையைக் கொடுத்த விக்ரமன், விஜய் ஆகியோர் 'உன்னை நினைத்து' பட மோதலுக்குப் பிறகு இணைந்து படம் பண்ணவேயில்லை.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற டி ராமானுஜம் நூற்றாண்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது இந்த விழாவை முன்னின்று நடத்திய தயாரிப்பாளர் தாணுவை பாராட்டினார். தங்களின் பகையை மறந்து டி ராமானுஜம் நூற்றாண்டு விழாவில் இருவரும் இணைந்து கலந்து கொண்டனர்.
அடுத்தது இயக்குனர் விக்ரமன் அவரது மகன் விஜய் கனிஷ்கா, மற்றும் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோருடன் விஜய்யை நேரில் சந்தித்தார். விஜய் கனிஷ்காவை வாழ்த்திய விஜய் இயக்குனர் விக்ரமனையும் கட்டித் தழுவினார்.
இந்த இரண்டு சந்திப்புகளும் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.